16 வயது சிறுமிக்கு குழந்தை சிறுவன் மீது 'போக்சோ' வழக்கு
16 வயது சிறுமிக்கு குழந்தை சிறுவன் மீது 'போக்சோ' வழக்கு
ADDED : ஜூலை 06, 2024 04:23 AM
விழுப்புரம்: 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கி, திருமணம் செய்த வழக்கில் 17 வயது சிறுவன் மீது போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 10ம் வகுப்பு படித்து வரும் 17 வயது மாணவரும், அதே பகுதியை சேர்ந்த 9ம் வகுப்பு படித்து வரும் 16 வயது மாணவிக்கும், கடந்தாண்டு பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். இதில், மாணவிகர்ப்பமடைந்துள்ளார்.
இதற்கிடையே அதே ஊரில் உள்ள ஒரு கோவிலில், கடந்த 2 மாதங்களுக்கு முன் யாருக்கும் தெரியாமல் சிறுவன் அந்த சிறுமிக்கு தாலி கட்டி திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த 28ம் தேதி, திருக்கோவிலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர் நேற்று முன்தினம் இரவு அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார், 17 வயது சிறுவன் மீது, போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.