sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலை பறிமுதல் 2 பேர் கைது

/

இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலை பறிமுதல் 2 பேர் கைது

இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலை பறிமுதல் 2 பேர் கைது

இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலை பறிமுதல் 2 பேர் கைது


ADDED : ஜூன் 04, 2024 01:21 AM

Google News

ADDED : ஜூன் 04, 2024 01:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூர் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.25 லட்சம் மதிப்புள்ள 80 மூடை பீடி இலை பண்டல்களுடன், மினிலாரி, காரை பறிமுதல் செய்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சாயல்குடி அருகேயுள்ள நரிப்பையூர் ஐந்து ஏக்கர் கடற்கரைப்பகுதியில் நேற்று அதிகாலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் கார், மினி லாரி நின்றிருந்தன. போலீசார் மற்றும் நுண்ணறிவு போதைப்பொருள் தடுப்பு போலீசார் வாகனங்களை சோதனையிட வந்தனர்.

அப்போது மினி லாரியில் இருந்து பீடி இலை பண்டல்களை இறக்கி நாட்டுப் படகுகளில் ஏற்றிக்கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அங்கிருந்த 20க்கு மேற்பட்ட நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். கார், மினி லாரி டிரைவர்கள் துாத்துக்குடி பொன்ராஜ் 44, மதுரை உசிலம்பட்டி காமு 52 ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

80 மூடைகளில் 3700 கிலோ எடை கொண்ட பீடி இலை பண்டல்களை பறிமுதல் செய்தபோலீசார் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டவர்கள் யார் என விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us