ADDED : மே 26, 2024 06:55 AM

சென்னை : தாம்பரம் - நாகர்கோவில் உட்பட மூன்று சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்படுகிறது.
இது குறித்து தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்கு
றிப்பு:
பயணியரின் தேவையை கருத்தில் கொண்டு பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில்களின் சேவை நீட்டித்து இயக்கப்படுகிறது
l நாகர்கோவில் - தாம்பரம் வாராந்திர விரைவு ரயில் ஜூன் 2ம் தேதி முதல் 30ம் தேதி வரையிலும், தாம்பரம் - நாகர்கோவில் வாராந்திர விரைவு ரயில் ஜூன் 3ம் தேதி முதல் ஜூலை 1ம் தேதி வரையிலும் நீட்டித்து இயக்கப்படுகிறது
l திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் ஜூன் 2ம் தேதி முதல் 30ம் தேதி வரையிலும், மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் ஜூன் 3ம் தேதி முதல் ஜூலை 1ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும்
l சென்னை சென்ட்ரல் - கொச்சுவேலி வாராந்திர சிறப்பு ரயில் ஜூன் 5ம் தேதி முதல் ஜூலை 3ம் தேதி வரையிலும், கொச்சுவேலி - சென்ட்ரல் வாராந்திர சிறப்பு ரயில் ஜூன் 6ம் தேதி முதல் ஜூலை 4ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்பட உள்ளது
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.