sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஒன்றரை கோடி ரூபாய் அபராதமா... எல்லை மீறும் இலங்கை அரசு; எச்சரிக்கும் அன்புமணி!

/

ஒன்றரை கோடி ரூபாய் அபராதமா... எல்லை மீறும் இலங்கை அரசு; எச்சரிக்கும் அன்புமணி!

ஒன்றரை கோடி ரூபாய் அபராதமா... எல்லை மீறும் இலங்கை அரசு; எச்சரிக்கும் அன்புமணி!

ஒன்றரை கோடி ரூபாய் அபராதமா... எல்லை மீறும் இலங்கை அரசு; எச்சரிக்கும் அன்புமணி!

11


UPDATED : செப் 05, 2024 02:06 PM

ADDED : செப் 05, 2024 02:01 PM

Google News

UPDATED : செப் 05, 2024 02:06 PM ADDED : செப் 05, 2024 02:01 PM

11


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட 3 தமிழக மீனவர்களுக்கு தலா ரூ.1.50 கோடி அபராதம் விதித்துள்ள இலங்கை அரசுக்கு பா.ம.க., தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அபராதம்


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ஆகஸ்ட் 27ல் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரில், மூவர் ஏற்கனவே ஒருமுறை கைது செய்யப்பட்டவர்கள் என்று கூறி அவர்களுக்கு தலா ரூ.1.50 கோடி அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மீண்டும் மீண்டும்


ஏற்கனவே தூத்துக்குடி மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ.3.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும், மீண்டும் அபராதம் விதிப்பது கண்டிக்கத்தக்கது.

பேச்சுவார்த்தை


நான் தொடர்ந்து வலியுறுத்தி வருவதைப் போல தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கவே இலங்கை அரசு இவ்வாறு செய்கிறது. இலங்கை அரசின் இந்த அட்டகாசத்தை இனியும் அனுமதிக்கக்கூடாது. தமிழக மீனவர்கள், இலங்கை மீனவர்கள், தமிழக அரசு, இலங்கை அரசு ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுக்களுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்து இந்த சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us