ADDED : மே 09, 2024 01:42 AM
சென்னை:தமிழகத்தில் வேலை தேடும் இளைஞர்கள் தங்கள் கல்வி தகுதியை, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
கடந்த ஏப்., 30ம் தேதி நிலவரப்படி, மாநிலத்தில் 53.74 லட்சம் பேர், வேலை வாய்ப்பு அலுவலகங்களில் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர். இவர்களில், 24.75 லட்சம் பேர் ஆண்கள்; 28.99 லட்சம் பேர் பெண்கள்; 284 பேர் திருநங்கையர்.
பதிவு செய்தவர்களில் 10.70 லட்சம் பேர், 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள்; 23.62 லட்சம் பேர், 19 முதல் 30 வயது வரை உள்ள கல்லுாரி மாணவர்கள்; 16.95 லட்சம் பேர், 31 முதல் 45 வயது வரை உள்ள, அரசு பணிக்காக காத்திருப்போர்; 2.41 லட்சம் பேர், 46 முதல் 60 வயது வரை உள்ளவர்கள்; 7,323 பேர், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
பள்ளிப் படிப்பு முடித்தவர்கள், பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள், டிப்ளமா முடித்தவர்கள் போன்றோர், தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.