sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மொபைல் செயலி உதவியால் ரவுடிகள் 550 பேர் சிக்கினர்

/

மொபைல் செயலி உதவியால் ரவுடிகள் 550 பேர் சிக்கினர்

மொபைல் செயலி உதவியால் ரவுடிகள் 550 பேர் சிக்கினர்

மொபைல் செயலி உதவியால் ரவுடிகள் 550 பேர் சிக்கினர்

4


ADDED : மார் 12, 2025 03:27 AM

Google News

ADDED : மார் 12, 2025 03:27 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: எப்.ஆர்.எஸ்., எனப்படும், மொபைல் செயலியின் உதவியுடன், கடந்த ஆறு மாதங்களில், 550 ரவுடிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

தமிழக காவல் துறையில், முக அடையாளத்தை வைத்து, குற்றம் செய்த நபர்களை கண்டறிய, எப்.ஆர்.எஸ்., எனப்படும், மொபைல் செயலி பயன்படுத்தப்படுகிறது.

இதில், மாநிலம் முழுதும் உள்ள போலீஸ் நிலையங்கள் வாரியாக பதிவான வழக்குகள், அவற்றில் சிக்கிய நபர்கள் குறித்த விபரங்கள், பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன.

ரவுடிகள், பழைய குற்றவாளிகள், சந்தேக நபர்கள், காணாமல் போனவர்கள் குறித்த தரவுகளும் இடம் பெற்றுள்ளன.

அதேபோல, 'ஸ்மார்ட் காவலர்' என்ற மொபைல் செயலியிலும், ரவுடிகள் உள்ளிட்ட தரவுகள் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன.

இவற்றின் வாயிலாக, போலீசார் வாகன சோதனையில், சந்தேக நபர்களை படம் பிடிக்கும் போது, அவர் குற்ற வழக்கில் சிக்கியவராக இருந்தால், அவர் யார்? எந்த ஊர்.

எந்த மாதிரியான குற்றத்தில் ஈடுபட்டவர், அவர் மீது நிலுவையில் உள்ள வழக்கு என்ன என்பது உட்பட, அனைத்து விபரங்களும் தெரிந்து விடும்.

அந்த வகையில், கடந்த ஆறு மாதங்களில், மொபைல் செயலி உதவியுடன், 550 ரவுடிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 'மொபைல் செயலிகளில், ரவுடிகள், பழைய குற்றவாளிகள், சந்தேக நபர்கள் என, 30,௦௦௦ பேரின் தரவுகள், பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன.

இந்த விபரம், தலைமறைவாக உள்ள ரவுடிகள் மற்றும் குற்றவாளிகளை கைது செய்ய உதவியாக உள்ளது' என்றனர்.






      Dinamalar
      Follow us