sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திருச்செந்துார் கடற்கரையில் 800 பேர் முருகர் வேடமணிந்து பரதநாட்டியம்

/

திருச்செந்துார் கடற்கரையில் 800 பேர் முருகர் வேடமணிந்து பரதநாட்டியம்

திருச்செந்துார் கடற்கரையில் 800 பேர் முருகர் வேடமணிந்து பரதநாட்டியம்

திருச்செந்துார் கடற்கரையில் 800 பேர் முருகர் வேடமணிந்து பரதநாட்டியம்


ADDED : ஜூன் 02, 2024 09:15 AM

Google News

ADDED : ஜூன் 02, 2024 09:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி : திருச்சியில் செயல்படும் சிவசக்தி அகாடமி சார்பில், உலக சாதனைக்காக 800 மாணவியர் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் பரதநாட்டியம் ஆடும் நிகழ்ச்சி திருச்செந்துார் பைரவர் கோவில் கடற்கரையில் நேற்று நடந்தது.

செந்தூர் அலை ஓசையில் கலை அர்ப்பணம் என்ற தலைப்பில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. திருச்செந்துார் நகராட்சி துணைத் தலைவர் செங்குழி ரமேஷ் தலைமை வகித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். 5 வயது முதல் 20 வயது வரையிலான மாணவிகள் முருகர் வேடமணிந்து கைகளில் வேல் ஏந்தியும், காவடியை சுமந்தும் 17 நிமிடத்தில் பரதநாட்டியம் ஆடி சாதனை படைத்தனர்.

ஏசியா பசுபிக் ரெக்கார்ட்ஸ், ரெக்கார்ட்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்தினர் பரதநாட்டியத்தில் பங்கேற்ற மாணவிகளுக்கு சாதனைக்கான சான்றிதழ்கள், பதக்கம் மற்றும் விருதினை வழங்கினர். ஒரே நேரத்தில் 800 பேர் பரதநாட்டியம் என்பது உலக சாதனைக்கான முயற்சி என திருச்சி சிவசக்தி அகாடெமி நிறுவனர் மீனா சுரேஷ் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us