UPDATED : ஏப் 07, 2024 12:14 PM
ADDED : ஏப் 07, 2024 07:16 AM

தமிழக தலைநகரான சென்னையின் முக்கிய தொகுதியாக தென் சென்னை உள்ளது. வி.ஐ.பி., போட்டியாளர்கள் மல்லுக்கட்டும் தொகுதியான இங்கு, 32,000 பேருக்கு ஓட்டு இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
சென்னையின் பிரதான நதிகளான கூவம், அடையாற்றை ஒட்டிய சைதாப்பேட்டை, திருவல்லிக்கேணி, தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசித்த பெரும்பாலானோர், சாலையோரம் வசித்த மக்கள் மறுகுடியமர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
இவர்களுக்காக, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட பெரும்பாக்கத்தில், 21,000 வீடுகள் கட்டப்பட்டன. மொத்தம் 160 பிளாக்குகளில், 60,000த்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சமுதாய வளர்ச்சி பிரிவு ஏற்படுத்தி தருகிறது.

