sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மாவுக்கல் கழுத்தணி, மீன் உருவம் பொறித்த பானை ஓடுகள் கிடைத்தன

/

மாவுக்கல் கழுத்தணி, மீன் உருவம் பொறித்த பானை ஓடுகள் கிடைத்தன

மாவுக்கல் கழுத்தணி, மீன் உருவம் பொறித்த பானை ஓடுகள் கிடைத்தன

மாவுக்கல் கழுத்தணி, மீன் உருவம் பொறித்த பானை ஓடுகள் கிடைத்தன


ADDED : ஜூலை 04, 2024 01:37 AM

Google News

ADDED : ஜூலை 04, 2024 01:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழக தொல்லியல் துறை சார்பில், தமிழகத்தில் எட்டு இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடக்கின்றன.

இதில், விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில், நுாலில் கோர்த்து கழுத்தில் அணியும் வகையில், மாவுக்கல்லால் செய்யப்பட்ட கழுத்தணி கண்டெடுக்கப்பட்டுள்ளது. கூம்பு வடிவில் செய்யப்பட்டுள்ள இந்த மாவுக்கல் அணிகலன், பச்சை நிறத்தில் உள்ளது. இதன் தலைப் பகுதியில் அணிகலனுடன் கோர்க்கும் துளை உள்ளது.

இதேபோல், சிவகங்கை மாவட்டம் கீழடியில், தற்போது 10ம் கட்ட அகழாய்வுப் பணி நடக்கிறது. இங்கு, மீன் உருவம் பொறிக்கப்பட்ட பகுதியாக உடைந்த நிலையில் உள்ள இரண்டு பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சிவப்பு வண்ணம் பூசப்பட்ட, பளபளப்பான இந்த பானை ஓடுகளில், மிகவும் நேர்த்தியாக மீன் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த தொல்பொருட்களின் படங்களை, தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தன், 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us