கீழடி 10ம் கட்ட அகழாய்வில் கிடைத்த 'தமிழி' பானை ஓடு
கீழடி 10ம் கட்ட அகழாய்வில் கிடைத்த 'தமிழி' பானை ஓடு
ADDED : ஜூன் 27, 2024 01:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழடி: கீழடியில் 10ம் கட்ட அகழாய்வு கடந்த 18ம் தேதி துவங்கியது. தொல்லியல் துறை கீழடி அகழாய்வு தள இயக்குனர் ரமேஷ், இணை இயக்குனர் அஜய் தலைமையில் 13 தொழிலாளர்கள் அகழாய்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை பாசி மற்றும் கண்ணாடி மணிகள் உள்ளிட்ட 27 பொருட்கள் கிடைத்த நிலையில், தற்போது 'தா' என்ற 'தமிழி' எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக இன்னும் எழுத்துகள் இருக்கும் என நம்பப்படுகிறது. ஏற்கனவே ஐந்தாம் கட்ட அகழாய்வின் போது, அதிகபட்சமாக 13 எழுத்துகளை கொண்ட பானை ஓடு கண்டெடுக்கப்பட்ட நிலையில், மீண்டும் தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு கண்டறியப்பட்டுள்ளது.