திடீரென சாலைக்கு வந்த காட்டு யானை: அலறி அடித்து ஓடி உயிர் தப்பிய மக்கள்
திடீரென சாலைக்கு வந்த காட்டு யானை: அலறி அடித்து ஓடி உயிர் தப்பிய மக்கள்
ADDED : ஆக 31, 2024 07:57 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலூர்: நீலகிரி மாவட்டம், கூடலூர் கோழிப்பாலம் அருகே, கோழிக்கோடு சாலைக்கு, இன்று, மதியம் 3:30 திடீரென வந்த காட்டு யானை பார்த்து, அதிர்ச்சியடைந்த
தனியார் பள்ளி பஸ் ஓட்டுநர், பஸ் நிறுத்தி, மாணவர்களை காப்பாற்றினார்.
தொடர்ந்து, கோழிப்பாலம் சென்ற காட்டு யானையை பார்த்த மக்கள், பஸ்சுக்கு காத்திருந்த பயணிகள் அலறி அடித்து ஓடி உயிர் தப்பினர். அப்பகுதியினர் விரட்டியதை தொடர்ந்து யானை வனப்பகுதிக்கு சென்றது. சம்பவத்தால் மக்கள் அச்சமடைந்தனர்.