தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ பத்திரப்பதிவுக்கு நாளை கூடுதல் 'டோக்கன்'

பத்திரப்பதிவுக்கு நாளை கூடுதல் 'டோக்கன்'

பத்திரப்பதிவுக்கு நாளை கூடுதல் 'டோக்கன்'


ADDED : மார் 09, 2025 02:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2025 02:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: மாசி மாத சுபமுகூர்த்த நாளான நாளை, பத்திரப்பதிவு மேற்கொள்ள, கூடுதல் டோக்கன் வழங்க பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சுபமுகூர்த்த நாட்களில் பத்திரப்பதிவு செய்ய, பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதை கருத்தில் வைத்து, பதிவுத்துறை சுபமுகூர்த்த நாட்களில் கூடுதல் டோக்கன் வழங்க உத்தரவிடுகிறது.

அந்த வகையில், மாசி மாதத்தில் சுபமுகூர்த்த நாளான நாளை, பத்திரப்பதிவு மேற்கொள்ள, கூடுதல் டோக்கன் வழங்கப்படும்.

இதன்படி, வழக்கமாக, 100 டோக்கன் வழங்கப்படும் சார்-பதிவாளர் அலுவலகங்களில், 150 டோக்கன்கள் வழங்கப்படும்; 200 டோக்கன் வழங்கப்படும் அலுவலகங்களில், 300 டோக்கன்கள் வழங்கப்படும் என பதிவுத்துறை அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us