sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சென்னை கார் பந்தயம் முதல் நாள் காலை அனுமதி இலவசம்

/

சென்னை கார் பந்தயம் முதல் நாள் காலை அனுமதி இலவசம்

சென்னை கார் பந்தயம் முதல் நாள் காலை அனுமதி இலவசம்

சென்னை கார் பந்தயம் முதல் நாள் காலை அனுமதி இலவசம்


ADDED : ஆக 24, 2024 10:41 PM

Google News

ADDED : ஆக 24, 2024 10:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:''சென்னையில் நடக்க உள்ள, 'பார்முலா - 4' கார் பந்தயத்தை, முதல் நாள் காலை பொது மக்கள் இலவசமாக பார்க்க அனுமதிக்கப்படுவர்,'' என, அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.

சென்னையில் வரும், 31 மற்றும் செப்., 1ம் தேதி, 'பார்முலா - 4' கார் பந்தயம் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து, அமைச்சர் உதயநிதி, தலைமைச் செயலர் முருகானந்தம் தலைமையில், நேற்று தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டம் முடிந்த பின், அமைச்சர் உதயநிதி கூறியதாவது:

கார் பந்தயத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இப்பந்தயத்தை, 8,000 பேர் நேரில் அமர்ந்து பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வரும் 31ம் தேதி காலை பொது மக்கள் இலவசமாக பந்தயத்தை பார்க்கலாம்.

மதியத்திற்குப் பின், தகுதி சுற்றுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இரவு 10:30 மணி வரை, போட்டிகள் நடக்கும். போக்குவரத்திற்கு எந்தவித இடையூறும் இல்லாமல், போட்டிகளை நடத்த, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us