ADDED : ஜூன் 18, 2024 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'நீட்' தேர்வு முறையாக நடத்தப்படுவதில்லை. அத்தேர்வுக்கு தமிழகத்தில் இருந்து முதலில் எதிர்ப்பு வந்தது. தற்போது பிற மாநிலங்களும், தமிழகத்தின் வாதங்களை ஏற்கின்றன.
நீட் தேர்வில் எந்த அடிப்படையில் மதிப்பெண் தருகின்றனர் என தெரியவில்லை. இது, நம்பகத் தன்மையை இழக்கச் செய்கிறது.
தமிழகத்தில் அ.தி.மு.க., பாரம்பரிய கட்சியாக இருந்தது. இன்றைக்கு அக்கட்சி தலைமையின்றி சின்னாபின்னமாகி சிதைந்து வருகிறது. ஆந்திர அரசியலில் எதிரெதிராக இருக்கும் சந்திரபாபு, ஜெகன்மோகன் ஆகியோர் மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவிப்பது வித்தியாசமாக உள்ளது. நெருக்கடிக்கு அடிபணிந்து தான் ஆதரவு தெரிவிக்கின்றனர்.
- கார்த்தி,
காங்கிரஸ், எம்.பி.,