sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மதுவற்ற தமிழகம் தான் வளர்ச்சி நிறைந்தது: அழகிரி

/

மதுவற்ற தமிழகம் தான் வளர்ச்சி நிறைந்தது: அழகிரி

மதுவற்ற தமிழகம் தான் வளர்ச்சி நிறைந்தது: அழகிரி

மதுவற்ற தமிழகம் தான் வளர்ச்சி நிறைந்தது: அழகிரி


ADDED : ஜூன் 27, 2024 02:31 AM

Google News

ADDED : ஜூன் 27, 2024 02:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்டுமன்னார்கோவில்:காட்டுமன்னார்கோவிலில் முன்னாள் தமிழக காங்., தலைவர் இளையபெருமாள் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற முன்னாள் காங்., மாநில தலைவர் அழகிரி அளித்த பேட்டி:

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் விவாதத்திற்குரியது. காங்.,கை பொறுத்தவரை மதுவிலக்கு என்பதில் உறுதியாக உள்ளது. அ.தி.மு.க., பா.ஜ., பா.ம.க., கட்சிகள், கள்ளக்குறிச்சி மரணத்திற்கு அனுதாபம் தெரிவிக்கிறீர்களா அல்லது அந்த மரணத்தை வைத்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக அரசியல் செய்கிறீர்களா.

இந்த கட்சிகள் தங்களின் மது கொள்கையை வெளிப்படுத்த மறுக்கின்றன. இந்த கட்சிக்காரர்கள் எல்லாம் அந்த ஊரில் மது விற்பனை செய்துள்ளனர். கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

ஸ்டாலினை வீழ்த்த மதுவை கையில் எடுத்திருக்கிறார்கள். முதல்வர் ராஜினாமாதான் அவர்களின் நோக்கம். பாதிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மக்கள் மீது இல்லை. இந்த அரசு நீடிக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

மதுவற்ற தமிழகம் தான் வளர்ச்சி நிறைந்த, வலிமைமிக்க தமிழகமாக இருக்கும். தவறு செய்தவர்கள் மீது முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். குற்றவாளிகளை பாதுகாக்கவில்லை. குற்றத்தை நியாயப்படுத்தவில்லை . சரியான பாதையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே இந்த அரசாங்கம் ராஜினாமா செய்ய வேண்டும் என்கின்ற கருத்தை காங்., கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

இவ்வாறு அழகிரி கூறினார்.






      Dinamalar
      Follow us