sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'நீட்' தேர்வர்களுக்கு தமிழகத்திற்குள்ளேயே ஒதுக்கீடு

/

'நீட்' தேர்வர்களுக்கு தமிழகத்திற்குள்ளேயே ஒதுக்கீடு

'நீட்' தேர்வர்களுக்கு தமிழகத்திற்குள்ளேயே ஒதுக்கீடு

'நீட்' தேர்வர்களுக்கு தமிழகத்திற்குள்ளேயே ஒதுக்கீடு


ADDED : ஆக 06, 2024 12:58 AM

Google News

ADDED : ஆக 06, 2024 12:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்களுக்கு, தமிழகத்திலேயே தேர்வு மையங்களை, தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் ஒதுக்கியுள்ளது.

நாடு முழுதும் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, முது நிலை மருந்துவ படிப்புகளுக்கான சேர்க்கை, நீட் மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகிறது.

இதற்கான நீட் தேர்வை, தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம், வரும் 11ம் தேதி நடத்த உள்ளது. தமிழகத்தில் இருந்து 25,000 பேர் உட்பட நாடு முழுதும், 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுத உள்ளனர்.

இந்நிலையில், தமிழக தேர்வர்களுக்கு, அவர்கள் கேட்டிருந்த நான்கு விருப்ப தேர்வு மையங்களை ஒதுக்காமல், 750 கி.மீ., - 1,000 கி.மீ., தொலைவில், ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநிலங்களில் மையம் ஒதுக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது.

திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை சந்தித்து, தேர்வர்களுக்கு அந்தந்த மாநிலத்திலேயே மையங்களை ஒதுக்க கோரிக்கை வைத்தார்.

அதைத் தொடர்ந்து, 75 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு, தமிழகத்திலேயே தேர்வு மையங்களை, தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் மறு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த தகவல், மின்னஞல் வாயிலாக, தேர்வர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us