ADDED : மே 25, 2024 08:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:'ரேமல்' புயல் முன்னெச்சரிக்கையால், சென்னை - - அந்தமான் இடையே இயக்கப்படும் இரண்டு, 'ஏர் இந்தியா' விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன.
சென்னையில் இருந்து நேற்று காலை 5:05 மணிக்கு செல்ல வேண்டிய விமானம் மற்றும் காலை 7:55 மணிக்கு அந்தமானில் இருந்து புறப்பட வேண்டிய விமானம், நேற்று ரத்து செய்யப்பட்டன.
இதேபோல், கோல்கட்டா, விசாகப்பட்டினத்தில் இருந்து அந்தமான் செல்லும் ஏர் இந்தியா விமானங்களும், அந்தமானில் இருந்து கோல்கட்டா, விசாகப்பட்டினம் வர வேண்டிய ஏர் இந்தியா விமானங்களும், நேற்று ரத்து செய்யப்பட்டன.
இருப்பினும், 'இண்டிகோ ஏர்லைன்ஸ் மற்றும் ஆகாஷா ஏர்லைன்ஸ்' பயணி யர் விமானங்கள், வழக்கம் போல் இயக்கப்பட்டன.