sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

போதைப்பொருள் ஒழிப்பு அரசு தீவிர ஆலோசனை

/

போதைப்பொருள் ஒழிப்பு அரசு தீவிர ஆலோசனை

போதைப்பொருள் ஒழிப்பு அரசு தீவிர ஆலோசனை

போதைப்பொருள் ஒழிப்பு அரசு தீவிர ஆலோசனை

1


ADDED : மே 12, 2024 12:16 AM

Google News

ADDED : மே 12, 2024 12:16 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழகத்தில் போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக, பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க, அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இந்த சூழ்நிலையில், போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம், நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது. தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா தலைமை வகித்தார்.

முதல்வரின் செயலர் முருகானந்தம், உள்துறை செயலர் அமுதா, நிதித்துறை செயலர் உதயசந்திரன், டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இரண்டு மணி நேரம் நடந்த கூட்டத்தில், மாநிலம் முழுதும் போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

மேலும் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள் மத்தியில், போதைப் பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us