sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தெற்கு ரயில்வேயில் அப்ரென்டிஸ் ஆகணுமா; 2438 பேருக்கு வாய்ப்பு

/

தெற்கு ரயில்வேயில் அப்ரென்டிஸ் ஆகணுமா; 2438 பேருக்கு வாய்ப்பு

தெற்கு ரயில்வேயில் அப்ரென்டிஸ் ஆகணுமா; 2438 பேருக்கு வாய்ப்பு

தெற்கு ரயில்வேயில் அப்ரென்டிஸ் ஆகணுமா; 2438 பேருக்கு வாய்ப்பு

2


ADDED : ஜூலை 31, 2024 05:05 PM

Google News

ADDED : ஜூலை 31, 2024 05:05 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பிட்டர், டர்னர், மெஷினிஸ்ட், பிளம்பர், டீசல் மெக்கானிக், பெயின்டர், வயர்மேன், எலக்ட்ரீசியன், வெல்டர், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் ஆகிய பிரிவுகளில் அப்ரென்டிஸ் பணி வாய்ப்பை வழங்குகிறது தெற்கு ரயில்வே. 10ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ., தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாய்ப்பு; மொத்தம் 2,438 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்க கடைசி நாள் ஆக.,12ம் தேதி.

தெற்கு ரயில்வேக்கு உட்பட சென்னை, கோவை, திருச்சி, திருவனந்தபுரம், சேலம், பாலக்காடு கோட்டம், பெரம்பூர், அரக்கோணம் பணிமனை உள்ளிட்ட இடங்களில், 2,438 தொழில் பழகுநர் (apprentice) பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கல்வி தகுதி என்ன?

இந்த பயிற்சி இடங்களுக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அந்தந்த பிரிவில் ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும் எம்.எல்.டி., பணியிடங்களுக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது

விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு 15 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் பணியிடங்களுக்கான கல்வித் தகுதி படிப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிப்பது எப்படி?

https://sr.indianrailways.gov.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அந்தந்த மண்டலங்களுக்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விபரங்களை அறிய, https://sr.indianrailways.gov.in/ என்ற லிங்கை கிளிக் செய்யவும். விண்ணப்பிக்க கடைசி தேதி வரும் ஆகஸ்ட் 12. இன்னும் 12 நாட்கள் உள்ளன.

விண்ணப்பிக்க கட்டணம்

பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. எஸ்.சி, எஸ்.டி., மற்றும் மகளிர் ஆகியோர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us