sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பா.ம.க., துண்டு அணிந்து மாணவர்கள் நடனம்: பள்ளி தலைமையாசிரியர் டிரான்ஸ்பர்!

/

பா.ம.க., துண்டு அணிந்து மாணவர்கள் நடனம்: பள்ளி தலைமையாசிரியர் டிரான்ஸ்பர்!

பா.ம.க., துண்டு அணிந்து மாணவர்கள் நடனம்: பள்ளி தலைமையாசிரியர் டிரான்ஸ்பர்!

பா.ம.க., துண்டு அணிந்து மாணவர்கள் நடனம்: பள்ளி தலைமையாசிரியர் டிரான்ஸ்பர்!

24


ADDED : மார் 08, 2025 01:54 PM

Google News

ADDED : மார் 08, 2025 01:54 PM

24


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: கிருஷ்ணகிரி அருகே பள்ளி விழாவில், பா.ம.க., துண்டு அணிந்து கொண்டு மாணவர்கள் நடனம் ஆடிய வீடியோ வைரல் ஆன நிலையில், பள்ளி தலைமையாசிரியர் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் நிருபர்கள் சந்திப்பில் அமைச்சர் மகேஷ் கூறியதாவது: நாங்கள் மொழி பெயர்ப்பாளர்களை உருவாக்கவில்லை. திறமையாளர்களை உருவாக்கத்தான் இரு மொழிக் கொள்கை தேவை என சொல்கிறோம். நாம் எல்லோரும் இரு மொழி கொள்கை தான் படித்து விட்டு வந்திருக்கிறோம். நம்ம பிள்ளைகளும் அதை தான் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.

எதுக்கு பிள்ளைகளுக்கு கஷ்டத்தை கொடுக்கிறீர்கள். எங்க பிள்ளை ஆசைப்பட்டால் எவ்வளவு மொழி வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளட்டும். கட்டாயாமாக இருக்க கூடாது என்பது தான் எங்களது கருத்து. நீங்கள் மும்மொழி கொள்கையை ஒப்புக் கொண்டால் தான் நிதி தருவேன் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்?

மும்மொழிக் கொள்கைக்கு பள்ளிக்குழந்தைகளிடம் கையெழுத்து வாங்குவது, ரயிலில் பிஸ்கட் கொடுத்து பயணிகளை ஏமாற்றுவது போல் இருக்கிறது. பிஸ்கட் மிட்டாய் கொடுத்து ஏமாற்றும் வேலை எல்லாம் செய்யக்கூடாது. மிஸ்டு கால் கொடுத்து ஆட்கள் சேர்ப்பதற்கான தொடர்ச்சியாக தான் பார்க்கிறோம்.

மும்மொழி கொள்ளை குறித்து பெற்றோர்களிடம் சொல்லுங்கள். முதலில் நீங்க வீடு வீடாக போய் தான் கையெழுத்து வாங்க வேண்டும். பள்ளிகளுக்கு வர கூடிய பிள்ளை பயமுறுத்துவது, கையை பிடித்து கொண்டு வந்து மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து வாங்குவது கண்டனத்துக்குரியது. இவ்வாறு அவர் கூறினார்.

தலைமையாசிரியர் டிரான்ஸ்பர்

கிருஷ்ணகிரி மாவட்டம் தட்டரஹள்ளி அடுத்த சோப்பனுார் அரசு உயர்நிலைப்பள்ளி ஆண்டு விழாவில், மாணவர்கள் கலை நிகழ்ச்சி நடந்தது. அப்போது, சில மாணவர்கள், பா.ம.க., துண்டு அணிந்தபடி கலை நிகழ்ச்சியில் நடனம் ஆடினர்.

இந்த வீடியோ வைரல் ஆன நிலையில், பள்ளியில் முதன்மைக்கல்வி அலுவலர் விசாரணை நடத்தினார். அதன் முடிவில், பள்ளி தலைமையாசிரியர் விஜயகுமார் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை, அமைச்சர் மகேஷ் இன்று உறுதி செய்தார்.






      Dinamalar
      Follow us