sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கொலை வழக்கில் கைதான இன்ஸ்பெக்டருக்கு ஜாமின்

/

கொலை வழக்கில் கைதான இன்ஸ்பெக்டருக்கு ஜாமின்

கொலை வழக்கில் கைதான இன்ஸ்பெக்டருக்கு ஜாமின்

கொலை வழக்கில் கைதான இன்ஸ்பெக்டருக்கு ஜாமின்


ADDED : ஜூலை 26, 2024 08:27 PM

Google News

ADDED : ஜூலை 26, 2024 08:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துாரில் ஒரு கொலை வழக்கில் கைதான இன்ஸ்பெக்டர் சத்திய ஷீலாவிற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஜாமின் அனுமதித்தது. ஸ்ரீவில்லிபுத்துார் ராமர், 60, கட்டட தொழிலாளி. இவர் அதே பகுதி முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு மே 21ல் சென்றார். அங்கு சிங்கம் சிலை வைப்பது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் ராமரை சிலர் தாக்கினர்.

காயமடைந்த அவர் இறந்தார். சிலர் மீது ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் போலீசார் வழக்கு பதிந்தனர். இவ்வழக்கில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே மேட்டுப்பட்டியை சேர்ந்த சத்திய ஷீலாவை போலீசார் கைது செய்தனர்.

இவர் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தார். தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் உயர்நீதிமன்றக் கிளையில் ஜாமின் மனு தாக்கல் செய்தார். நீதிபதி பி.புகழேந்தி: ஜாமின் அனுமதிக்கப்படுகிறது. மறு உத்தரவு பிறப்பிக்கப்படும்வரை ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் போலீசில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us