sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பறவைகள் கணக்கெடுப்பு வரும் 8ல் துவக்கம்

/

பறவைகள் கணக்கெடுப்பு வரும் 8ல் துவக்கம்

பறவைகள் கணக்கெடுப்பு வரும் 8ல் துவக்கம்

பறவைகள் கணக்கெடுப்பு வரும் 8ல் துவக்கம்


ADDED : மார் 01, 2025 01:53 AM

Google News

ADDED : மார் 01, 2025 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: நடப்பு ஆண்டுக்கான, ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு, வரும், 8ம் தேதி துவங்க உள்ளது.

வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் ஆண்டுதோறும், ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில், ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு நடக்கும். நடப்பு ஆண்டுக்கான பறவைகள் கணக்கெடுப்பு குறித்த அறிவிப்பு, இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில், அந்தந்த கோட்டங்களில், பறவைகள் சரணாலயங்களில் திரட்டப்பட்ட விபரங்களை தொகுக்கும் பணிகளில், வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். இதனால், பறவைகள் இருப்பு குறித்த உண்மை நிலவரம் தெரிய வராது என்று கூறப்பட்டது.

இந்நிலையில், வரும், 8, 9ம் தேதிகளில், நீர் பறவைகள் குறித்த ஒருங்கிணைந்த கணக்கெடுப்பும், 15, 16ம் தேதிகளில், திறந்தவெளி பகுதிகளுக்கான பறவைகள் கணக்கெடுப்பும் நடத்தப்பட உள்ளது.

இதில், பங்கேற்க விரும்புவோர், அந்தந்த பகுதிகளில் உள்ள பறவைகள் சரணாலயங்கள், வனத்துறை கோட்ட அலுவலகங்கள், வன உயிரின சரணாலயங்கள் மற்றும் புலிகள் காப்பக அதிகாரிகளை அணுகலாம்.

இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us