ADDED : ஏப் 22, 2024 04:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் பேட்டி: ஓட்டுப்பதிவு முடியும் வரை, வாக்காளர்கள் பெயர் நீக்கம் குறித்து, பா.ஜ., எதுவும் கூறவில்லை. தேர்தல் கமிஷன் ஏற்கனவே வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு போன்ற பணிகளை மேற்கொண்டது. அப்போது, அவர்கள் கவனித்திருக்கலாம்.
தேர்தல் முடிந்த பின், ஒரு லட்சம் பா.ஜ., வேட்பாளர்களை நீக்கி உள்ளதாகக் கூறுவது, ஏற்படப் போகும் தோல்விக்கு முன்கூட்டியே காரணத்தை கூறிவிட வேண்டும் என்பதை காட்டுகிறது.
இதற்கு, தலைமை தேர்தல் அதிகாரி உரிய விளக்கம் அளித்துள்ளார். இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார்.

