sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆதரிக்கும் எங்கள் மீது அவதுாறா?

/

ஆதரிக்கும் எங்கள் மீது அவதுாறா?

ஆதரிக்கும் எங்கள் மீது அவதுாறா?

ஆதரிக்கும் எங்கள் மீது அவதுாறா?


ADDED : செப் 05, 2024 01:54 AM

Google News

ADDED : செப் 05, 2024 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பேட்டி:

அருந்ததியருக்கான உள்ஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம். ஆனால், உள்ஒதுக்கீட்டை எதிர்ப்பதாக சிலர் திட்டமிட்டு அவதுாறு பரப்பி வருகின்றனர்.

பட்டியலினத்தவரை குழுக்களாக பிரித்து, இடஒதுக்கீடு வழங்க, மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்றும், பட்டியலினத்தவர் இடஒதுக்கீட்டில் 'கிரீமிலேயர்' வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர். இதன் மீது சீராய்வு மனு மட்டுமே தாக்கல் செய்திருக்கிறோம்.

'உள்ஒதுக்கீடு தொடர்பான சட்டத்துக்கு திருமாவளவன் ஆதரவு தெரிவித்ததால், அச்சட்டம் நிறைவேறியது' என, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறியிருந்தார். எனவே, நாங்கள் உள்ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை என்பது புலப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us