sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

/

விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்


ADDED : ஜூன் 25, 2024 12:19 AM

Google News

ADDED : ஜூன் 25, 2024 12:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை, கோவை, திருச்சி, கர்நாடக மாநிலம் கலபுரகி, குஜராத் விமான நிலையம் என, நாட்டில் உள்ள 100க்கும் மேற்பட்ட விமான நிலையங்களுக்கு, இ - மெயில் வாயிலாக நேற்று மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர்.

சென்னை, திருச்சி விமான நிலையங்கள் உட்பட பல்வேறு விமான நிலையங்களுக்கு, நேற்று காலை 6:50 மணிக்கு இ - மெயில் ஒன்று வந்தது. அதில், 'விமான நிலையத்தில் உள்ள கழிப்பறையில் உள்ள குழாயில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது; சிறிது நேரத்தில் வெடிக்கும்' என, குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதையடுத்து, சென்னை விமான நிலைய இயக்குனர் தலைமையில், வெடிகுண்டு கண்டறியும் நிபுணர் குழுவினர், சி.ஐ.எஸ்.எப்., என்ற மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், விமான போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள், விமான நிலைய போலீசார் பங்கேற்ற உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.

விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனைக்கு பின், வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பது தெரியவந்தது.

இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை தேடும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாகவே, விமான நிலையங்களுக்கு அதிகமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.

இந்த மாதத்தில், சென்னை விமான நிலையத்திற்கு மட்டும், ஏழாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.






      Dinamalar
      Follow us