sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சிறுமிகளுடன் சுற்றிய சிறுவர்கள் டி.எஸ்.பி.,யின் நுாதன தண்டனை

/

சிறுமிகளுடன் சுற்றிய சிறுவர்கள் டி.எஸ்.பி.,யின் நுாதன தண்டனை

சிறுமிகளுடன் சுற்றிய சிறுவர்கள் டி.எஸ்.பி.,யின் நுாதன தண்டனை

சிறுமிகளுடன் சுற்றிய சிறுவர்கள் டி.எஸ்.பி.,யின் நுாதன தண்டனை


ADDED : ஜூன் 27, 2024 03:25 AM

Google News

ADDED : ஜூன் 27, 2024 03:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் சிறுமிகளுடன் சுற்றித்திரிந்த சென்னை சிறுவர்களை பிடித்த டி.எஸ்.பி., ஆரோக்யராஜ், அவர்களுக்கு நுாதன தண்டனை வழங்கினார்.

விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டை வளாகத்தில், நேற்று பகல் 2:00 மணியளவில், 15 முதல் 16 வயதுடைய சிறுவர், சிறுமியர் நால்வர் சுற்றித்திரிந்தனர். தகவலறிந்த டி.எஸ்.பி., ஆரோக்யராஜ் தலைமையிலான போலீசார் அவர்களிடம் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவித்தனர்.

அவர்களை டி.எஸ்.பி., முகாம் அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அதில், நால்வரும், சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், பெற்றோருக்கு தெரியாமல் வீட்டைவிட்டு வெளியேறியதும் தெரிய வந்தது.

மேலும், சிறுவர்களின் ஹேர் ஸ்டைலில் வித்தியாசமாக இருந்தனர். உடன், சலுான்கடை ஊழியரை வரவழைத்த போலீசார், அவர்களுக்கு முடிதிருத்தம் செய்தனர். மேலும், நால்வருக்கும் அறிவுரை கூறிய டி.எஸ்.பி., ஆரோக்யராஜ், அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்துள்ளார்.






      Dinamalar
      Follow us