sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: நடவடிக்கை எடுக்க உத்தரவு

/

பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: நடவடிக்கை எடுக்க உத்தரவு

பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: நடவடிக்கை எடுக்க உத்தரவு

பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: நடவடிக்கை எடுக்க உத்தரவு

18


ADDED : ஏப் 18, 2024 12:34 PM

Google News

ADDED : ஏப் 18, 2024 12:34 PM

18


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உதவியாளர்களிடம் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி தொகுதி பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சுயேச்சை வேட்பாளர் மனு தாக்கல் செய்து இருந்தார். மனுவில், '' சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில், 4 கோடி ரூபாய் பிடிபட்டது தொடர்பாக, பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு எதிராக சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் படி, அமலாக்கத் துறையில் மனு அளித்துள்ளேன்.

பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கும், தகுதி நீக்கம் கோரிய மனு மீது நடவடிக்கை எடுக்க, தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட வேண்டும்'' எனக் கூறியிருந்தார்.

இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஏப்ரல் 18) விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், '' நயினார் நாகேந்திரன் மீது குற்ற வழக்கு பதியப்பட்டுள்ளது. வருமான வரித்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை அடிப்படையில் அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், '' பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கில் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என உத்தரவிட்டனர். நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சுயேச்சை வேட்பாளர் தாக்கல் செய்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us