தமிழகத்தில் 7 நாட்களுக்கு கனமழை பெய்யலாம்!: வானிலை மையம் அறிக்கை
தமிழகத்தில் 7 நாட்களுக்கு கனமழை பெய்யலாம்!: வானிலை மையம் அறிக்கை
UPDATED : ஜூன் 30, 2024 02:04 PM
ADDED : ஜூன் 30, 2024 07:02 AM

சென்னை: தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்று(ஜூன் 30) முதல் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மையத்தின் இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இன்று(ஜூன் 30) முதல் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
3 டிகிரி செல்சியஸ்
நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த ஐந்து நாட்களுக்கு, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், அனேக இடங்களில், அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டியே இருக்கும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில், 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்.
லேசான மழை
நேற்று காலை, 8:00 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டம், பந்தலுாரில் 28, தேவாலாவில், 19; பிரையர் எஸ்டேட் பகுதியில், 11 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.