sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கோம்பை திருமலை ராயப்பெருமாள் கோயிலில் 20 ஆண்டுக்கு பின் தேரோட்டம்; இன்று கொடி ஏற்றத்துடன் திருவிழா துவக்கம்

/

கோம்பை திருமலை ராயப்பெருமாள் கோயிலில் 20 ஆண்டுக்கு பின் தேரோட்டம்; இன்று கொடி ஏற்றத்துடன் திருவிழா துவக்கம்

கோம்பை திருமலை ராயப்பெருமாள் கோயிலில் 20 ஆண்டுக்கு பின் தேரோட்டம்; இன்று கொடி ஏற்றத்துடன் திருவிழா துவக்கம்

கோம்பை திருமலை ராயப்பெருமாள் கோயிலில் 20 ஆண்டுக்கு பின் தேரோட்டம்; இன்று கொடி ஏற்றத்துடன் திருவிழா துவக்கம்


ADDED : மே 13, 2024 07:39 AM

Google News

ADDED : மே 13, 2024 07:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தமபாளையம் : தேனி மாவட்டம் கோம்பையில் 20 ஆண்டுகளுக்கு பின், திருமலைராயப் பெருமாள் கோயில் தேரோட்டம் மே 23, 24 நடக்க உள்ளதை முன்னிட்டு, இன்று கொடியேற்றம் நடக்கிறது. இதனால் கோம்பை நகர் விழாக் கோலம் பூண்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற 12 பெரிய தேர்களில் இக்கோயில் தேரும் ஒன்று. கோம்பை மட்டுமல்லாது 16 கிராமங்களை சேர்ந்தவர்களும் இணைந்து இக்கோயில் தேரோட்டத்தை நடத்துவது வழக்கம். 2003க்கு பின் 20 ஆண்டுகளாக இங்கு தேரோட்டம் நடைபெறவில்லை. இந்தாண்டு நடத்த கோம்பை அனைத்து சமுதாய தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

தற்போது தேரை பிரித்து பராமரிப்பு பணிகள் துவங்கி உள்ளன. தேரோட்டம் மே 12 முதல் ஜூன் 5ம் தேதி வரை 25 நாட்கள் மண்டகப்படி நடைபெறும். மே 22ல் தேர் அடி பெயர்த்தல். தொடர்ந்து 23, 24ல் தேரோட்டம் நடைபெறும்.

பொதுவாக தேரோட்டம் முடிந்தவுடன் நிகழ்ச்சிகளும் நிறைவு பெறுவது வழக்கம். ஆனால் கோம்பையில் தேர் மே 24ல் நிலைக்கு வந்த பின்னரும், தொடர்ந்து மண்டகப்படி ஜூன் 5 வரை நடைபெறுவது தனிச்சிறப்பு.

தேரோட்டம் நடைபெறுவதை ஒட்டி நேற்று மாலை அரண்மனையில் முகூர்த்த காய் வைத்து வணங்குதல் நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை மலைக் கோயிலில் காலை 11.00 மணிக்கு மேல் கொடி ஏற்றம் நடக்க உள்ளது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமூகத்தினர் மண்டகப்படி நடைபெறும். மே 19 ல் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

இந்த தேரோட்டத்தில் அனுமந்தன்பட்டி, பண்ணைப்புரம், மல்லிங்காபுரம், கரியணம்பட்டி, மேலசிந்தலச்சேரி, கீழ சிந்தலச்சேரி, ரெங்கநாதபுரம், துரைச்சாமிபுரம் ஆகிய கிராமங்களும் மண்டகப்படி நடத்துகின்றனர்.

கொடி ஏற்றத்திற்கு முன்னதாக ஜமீன் அரண்மனையில் இருந்து செங்கோல் பெற்று வருவது வழக்கம். சுவாமி ரதம் ஏறும் போது செங்கோல் சுவாமியின் கைகளில் இருக்கும்.

தேரோட்டம், மண்டகப்படி நிகழ்ச்சிகள் முடிந்து ஜூன் 5ல் சுவாமி மலைக்கோயிலிற்கு செல்லும் போது, செங்கோல் அரண்மனையில் ஒப்படைக்கப்படும்.






      Dinamalar
      Follow us