sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'வருண பகவான்' கையில் சதுரகிரியில் அனுமதி

/

'வருண பகவான்' கையில் சதுரகிரியில் அனுமதி

'வருண பகவான்' கையில் சதுரகிரியில் அனுமதி

'வருண பகவான்' கையில் சதுரகிரியில் அனுமதி


ADDED : ஜூன் 04, 2024 01:20 AM

Google News

ADDED : ஜூன் 04, 2024 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பிரதோஷம், அமாவாசை வழிபாட்டிற்கு மழையை பொறுத்து பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள், தற்போது கன மழை பெய்து வருவதால் பக்தர்கள் கோயிலுக்கு வருவதை தவிர்க்குமாறு வனத்துறை அறிவித்துள்ளது.

இக்கோயிலில் இன்று (ஜூன் 4) பிரதோஷம், ஜூன் 6ல் அமாவாசை வழிபாடு நடக்கிறது. இதனை முன்னிட்டு இன்று முதல் ஜூன் 7 வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் அறிவித்திருந்தனர்.

ஆனால் கடந்த சில நாட்களாக சதுரகிரி மலைப்பகுதியிலும், தாணிப்பாறை பகுதியிலும் கன மழை பெய்து ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. எனவே, தினசரி மழை அளவு மற்றும் ஓடைகளில் தண்ணீர் வரத்தினை பொறுத்தே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். மலைப்பகுதியில் மழை பெய்து வருவதால் சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் வருவதை தவிர்க்குமாறு வனத்துறையினர் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us