ADDED : மே 29, 2024 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:சென்னையை சேர்ந்தவர் யு-டியூபர் சவுக்கு சங்கர். தேனி பூதிப்புரத்தில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த போது, காரில் கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர், அவரது உதவியாளர் ராஜரத்தினம், டிரைவர் ராம்பிரபு ஆகியோரை பழனிசெட்டிபட்டி போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை போதைப் பொருள் தடுப்பு வழக்கு மதுரை சிறப்பு நீதிமன்றம் ஜூன் 5 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது. அவர் அதே நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தார்.
நீதிபதி செங்கமலச்செல்வன் ஏற்கனவே ஒத்திவைத்த நிலையில் இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
சவுக்கு சங்கர் தரப்பில் அவரது வழக்கறிஞர் அவகாசம் கேட்டார். இதையடுத்து, ஜாமின் மனு மீதான விசாரணை நாளை நடக்கிறது.