ADDED : ஆக 02, 2024 07:41 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் கட்டுப்பாடு மையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில்ல முதல்வர் ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். மேட்டூர் அணையில் உபரி நீர் திறக்கப்பட்டு உள்ள நிலை மற்றும் கோவை நீலகரி உள்ளிட்ட மலை மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு பணி குறித்து கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். 24 மணி நேரம் செயல்படும் பேரிடர் கட்டுப்பாடு மையத்தில் அழைப்புகள், பணிகள்,காவிரி கரையோர மாவட்டங்களில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்தும் முதல்வர் கேட்டறிந்தார்.