ADDED : ஏப் 10, 2024 05:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரம்பலுார் : -மத கலவரத்தை துாண்டும் விதமாக, பேசிய திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, ஹிந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் அய்யப்பன், பெரம்பலுார் கலெக்டர் கற்பகத்திடம் புகார் மனு கொடுத்தார்.
அந்த மனுவில் கூறியுள்ளதாவது:
கடந்த 6ம் தேதி பெரம்பலுார் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், தி.மு.க., வேட்பாளர் அருணை ஆதரித்து, வி.சி., தலைவர் திருமாவளவன் பிரசாரம் செய்தபோது, 'மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் பள்ளி வாசல்கள், சர்ச்சுகள் இடிக்கப்படும்' என, மத கலவரத்தை துாண்டும் விதமாக பேசினார்.
அவர் மீதும், வேட்பாளர் அருண் மீதும் நடவடிக்கை எடுத்து, இருவரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறிஉள்ளனர்.

