sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

10ம் வகுப்பு தேர்வு நிறைவு 'சென்டம்' அதிகரிக்கும்

/

10ம் வகுப்பு தேர்வு நிறைவு 'சென்டம்' அதிகரிக்கும்

10ம் வகுப்பு தேர்வு நிறைவு 'சென்டம்' அதிகரிக்கும்

10ம் வகுப்பு தேர்வு நிறைவு 'சென்டம்' அதிகரிக்கும்


ADDED : ஏப் 09, 2024 02:07 AM

Google News

ADDED : ஏப் 09, 2024 02:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்றுடன் நிறைவு பெற்றன. மே, 10ல் ரிசல்ட் வெளியாகிறது.

தமிழக அரசு பாடத்திட்டத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், கடந்த மாதம் முடிந்து, விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது.

அடுத்து, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள், நேற்று சமூக அறிவியல் தேர்வுடன் நிறைவு பெற்றன. தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட, 9.25 லட்சம் பேரில், 17,000 பேர், 'ஆப்சென்ட்' ஆகினர். இவர்கள் பள்ளிகளில் இருந்து இடைநிற்றல் ஆனவர்கள் என்று கூறப்படுகிறது.

பத்தாம் வகுப்பு தேர்வுக்கான விடைத்தாள்கள் வரும், 12ம் தேதி முதல் மதிப்பீடு செய்யப்பட உள்ளன. தேர்வு முடிவை, மே, 10ல் வெளியிட, அரசு தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.

ஆசிரியர்கள் பாராட்டு

ஏற்கனவே நடந்த அறிவியல் தேர்வு மிகவும் கடினமாக இருந்ததால், நேற்றைய சமூக அறிவியல் வினாத்தாள் மிகவும் கடினமாக இருக்குமோ என, மாணவ, மாணவியர் அச்சத்துடன் தேர்வு மையத்துக்கு சென்றனர்.

ஆனால், மாணவர்களுக்கு நிம்மதி தரும் வகையில், வினாத்தாள் நடுத்தரமாக அமைந்திருந்தது. சராசரி மாணவர்கள், தேர்ச்சி பெறும் வகையிலும், நன்றாக படிக்கும் மாணவர்கள், 'சென்டம்' என்ற, 100க்கு 100 மதிப்பெண் பெறும் வகையிலும் இருந்தது.

இந்த வினாத்தாள் தற்கால போட்டி தேர்வு அணுகுமுறைக்கு, முன்மாதிரியான வினாத்தாளாக இருந்தது. பொதுஅறிவு மற்றும் அரசியல் சார்ந்த கேள்விகள் இடம் பெற்றன.

நகரமயமாக்கலின் பாதிப்புகள், கருப்பு பணம் என்றால் என்ன; மாநில அமைச்சரவையின் தலைவர் யார், உலகமயமாக்கலின் தாக்கம், மாநிலங்களவையின் பதவிக்காலம் எவ்வளவு, வெளியுறவு கொள்கையை நிர்ணயிக்கும் காரணிகள்.

பழவேற்காடு ஏரி அருகில் உள்ள இரு மாநிலங்கள் என, பல வகைப்பட்ட பொது அறிவு மற்றும் அரசியல் கொள்கை சார்ந்த கேள்விகள் இடம் பெற்றதாக, ஆசிரியர்கள் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us