ADDED : மே 04, 2024 12:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், கேரள மாநிலம் வயநாட்டில் தேர்தல் முடிந்த பின், உ.பி., ரேபரேலியில் வேட்புமனு தாக்கல் செய்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது, காங்கிரஸ் கட்சிக்குள் உள்ள தார்மீக சீரழிவை காட்டுகிறது.
அவர்கள் நம்பிக்கை துரோகம் செய்ததற்காக, தென் மாநிலங்களில் மட்டுமின்றி, நாடு முழுதும் தோற்கடிக்கப்பட வேண்டும். காங்கிரஸ், வாக்காளர்களை சாதாரணமாக கருதுகிறது. வயநாடு மற்றும் ரேபரேலி தேர்தல் முடிவுகள், ஜூன், 4ம் தேதி அறிவிக்கப்படும் போது, காங்கிரஸ் கட்சியும், அதன் கூட்டணி கட்சிகளும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகும்.
- அண்ணாமலை,
தமிழக பா.ஜ., தலைவர்.