sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சீமான் வீட்டு காவலாளிகளுக்கு நீதிமன்றம் ஜாமின் மறுப்பு

/

சீமான் வீட்டு காவலாளிகளுக்கு நீதிமன்றம் ஜாமின் மறுப்பு

சீமான் வீட்டு காவலாளிகளுக்கு நீதிமன்றம் ஜாமின் மறுப்பு

சீமான் வீட்டு காவலாளிகளுக்கு நீதிமன்றம் ஜாமின் மறுப்பு


ADDED : மார் 06, 2025 07:32 PM

Google News

ADDED : மார் 06, 2025 07:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் நீலாங்கரை வீட்டில் நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் படி, வளசரவாக்கம் போலீசார், கடந்த 27ம் தேதி சம்மன் ஒட்டினர்.

அப்போது வீட்டின் பாதுகாவலராக இருந்த முன்னாள் ராணுவ பாதுகாப்பு படை வீரர் அமல்ராஜ் மற்றும் காவலாளி சுபாகர் உள்ளிட்டோர் சம்மனை கிழித்து போலீசாரை தாக்கியதாகவும், துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இருவருக்கும் ஜாமின் கோரி, கடந்த 28ம் தேதி செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனா உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us