sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அமலாக்கத்துறை விசாரணை பாரிவேந்தருக்கு ஐகோர்ட் உத்தரவு

/

அமலாக்கத்துறை விசாரணை பாரிவேந்தருக்கு ஐகோர்ட் உத்தரவு

அமலாக்கத்துறை விசாரணை பாரிவேந்தருக்கு ஐகோர்ட் உத்தரவு

அமலாக்கத்துறை விசாரணை பாரிவேந்தருக்கு ஐகோர்ட் உத்தரவு

1


ADDED : செப் 03, 2024 06:09 AM

Google News

ADDED : செப் 03, 2024 06:09 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: மருத்துவ படிப்பில் சேர, மாணவர்களிடம், 88 கோடி ரூபாய் பெற்ற விவகாரத்தில், அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை எதிர்த்து, எஸ்.ஆர்.எம்., நிறுவனர் பாரிவேந்தர் தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னை எஸ்.ஆர்.எம்., மருத்துவ கல்லுாரியில், மருத்துவ படிப்பில் சேர, மாணவர்களிடம், 88 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக, வேந்தர் மூவிஸ் மதன், எஸ்.ஆர்.எம்., நிறுவனர் பாரிவேந்தருக்கு எதிராக, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டு, பின், ஜாமினில் வெளியே வந்தனர். மாணவர்களிடம் பெற்ற தொகையை திருப்பி செலுத்தினர்.

இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்த வழக்கை, நீதிமன்றம் ரத்து செய்தது. மத்திய குற்றப்பிரிவு வழக்கின் அடிப்படையில், அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்து, பாரிவேந்தருக்கும், அவரது மகனுக்கும், 'சம்மன்' அனுப்பியது.

இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் பாரிவேந்தர் மனுத்தாக்கல் செய்தார். மனுவில், 'உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், 88.66 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டு விட்டது; வழக்கும் ரத்தாகி விட்டது.

'இந்நிலையில், 2022, 2023 ல் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதற்கு தடை விதிக்க வேண்டும்' என கூறப்பட்டது.

மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அமலாக்கத்துறை சார்பில், சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி, ''மனுதாரரும், அவரது குடும்பத்தினரும் நடத்தும் அறக்கட்டளையின் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, விரிவாக விசாரிக்க வேண்டியதுள்ளது. எனவே, சம்மன் நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கூடாது,'' என்றார்.

இதையடுத்து, மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கும்படி உத்தரவிட்டனர்.

விசாரணை நடத்த அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது என்பதால், தடை விதிக்க முடியாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us