sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இலங்கை பெண்ணிடம் பறிமுதல் செய்த தாலியை ஒப்படைத்தது சுங்கத்துறை

/

இலங்கை பெண்ணிடம் பறிமுதல் செய்த தாலியை ஒப்படைத்தது சுங்கத்துறை

இலங்கை பெண்ணிடம் பறிமுதல் செய்த தாலியை ஒப்படைத்தது சுங்கத்துறை

இலங்கை பெண்ணிடம் பறிமுதல் செய்த தாலியை ஒப்படைத்தது சுங்கத்துறை


ADDED : மார் 02, 2025 01:17 AM

Google News

ADDED : மார் 02, 2025 01:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : இலங்கை தமிழ் பெண்ணின் தாலிக்கொடியை பறிமுதல் செய்த சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள், நீதிமன்ற உத்தரவின்படி அப்பெண்ணிடம் தாலியை ஒப்படைத்தனர்.

இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர், 2023 டிசம்பரில் திருமணம் முடிந்து, குடும்பத்தினருடன் சென்னை வந்தார்.

சென்னை விமான நிலையத்தில், சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், அந்த பெண் உள்ளிட்ட மூன்று பெண்கள் அணிந்திருந்த தாலிக்கொடி, வளையல்கள் போன்றவை கடத்தல் நகைகள் எனக்கூறி பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து, அப்பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், பிப்., 15ம் தேதி பிறப்பித்த உத்தரவில், 'பெண்களுக்கு தாலி மிக முக்கியமானது. தாலி அணிந்து வருவது கடத்தல் அல்ல.

'எனவே, சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட தாலிக் கொடியை, இலங்கை தமிழ் பெண்ணுக்கு திருப்பித் தர வேண்டும்' என்று கூறப்பட்டது.

இதையடுத்து, பறிமுதல் செய்த தாலிக்கொடியை திரும்ப பெறுவதற்காக, அப்பெண் குடும்பத்தினர் நேற்று முன்தினம் இரவு, சென்னை விமான நிலையத்தில் உள்ள சுங்கத்துறை அலுவலகம் வந்தனர்.

அவர்களிடம் தாலிச் செயின்களை, அதிகாரிகள் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us