sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 63 ஆக உயர்ந்தது

/

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 63 ஆக உயர்ந்தது

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 63 ஆக உயர்ந்தது

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 63 ஆக உயர்ந்தது


ADDED : ஜூன் 27, 2024 02:25 AM

Google News

ADDED : ஜூன் 27, 2024 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி,:கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்று 63 ஆக உயர்ந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்த 229 பேருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

இவர்களில் நேற்று முன்தினம் வரை 59 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கருணாபுரம் ஏசுதாஸ்,35; ராமநாதன்,62; சேலம் அரசு மருத்துவமனையில் கருணாபுரத்தை சேர்ந்த ரஞ்சித்குமார்,26; சம்பத் மனைவி சரசு,52; ஆகியோர் உயிரிழந்தனர். இதையடுத்து, பலி எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று முன்தினம் வரை 28 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நேற்று கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 40 பேர், சேலம் 11 பேர், விழுப்புரத்தில் 2 பேர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.

தற்போது கள்ளக்குறிச்சியில் 48 பேர், புதுச்சேரியில் 9 பேர், சேலத்தில் 19 பேர், விழுப்புரத்தில் 2 பேர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஒருவர் என மொத்தம் 79 பேர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.






      Dinamalar
      Follow us