sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அன்றே சொன்னது தினமலர் : கோவை மேயர் ராஜினாமா ஏன்?

/

அன்றே சொன்னது தினமலர் : கோவை மேயர் ராஜினாமா ஏன்?

அன்றே சொன்னது தினமலர் : கோவை மேயர் ராஜினாமா ஏன்?

அன்றே சொன்னது தினமலர் : கோவை மேயர் ராஜினாமா ஏன்?

9


UPDATED : ஜூலை 03, 2024 07:35 PM

ADDED : ஜூலை 03, 2024 07:28 PM

Google News

UPDATED : ஜூலை 03, 2024 07:35 PM ADDED : ஜூலை 03, 2024 07:28 PM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லோக்சபா தேர்தல் முடிந்து விட்டதால், தமிழகத்தில் கோவை உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சிகளில் மேயர்கள் மாற்றப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் கோவை மேயர் கல்பனா இன்று ராஜினாமா செய்துள்ளார்.

கோவை மேயர் ராஜினாமா குறித்து கடந்த மாதம் 16-ம் தேதி தினமலரில் ‛‛பல மாநகராட்சிகளில் விரைவில் மேயர்கள் மாற்றம் '' என்ற தலைப்பில் செய்தி வெளியானது.

தமிழகத்தில் கடந்த 2022 ல் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க., கூட்டணி பெருவாரியான உள்ளாட்சிகளில் வெற்றி பெற்றது. தி.மு.க.,வைச் சேர்ந்த கவுன்சிலர்களே மேயர்களாக தேர்வு செய்யப்பட்டனர். அதிலும் மிக முக்கிய நகரங்களான சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று பெரிய மாநகராட்சிகளின் மேயர் பதவிகளும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டன.

கட்சியிலும், வயதிலும் அனுபவம் இல்லாதவர்களாக இருந்ததால், கட்சியில் சீனியர்களுக்கும், குறிப்பாக கட்சி நிர்வாகிகளுக்கும் அவர்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்தது.உதாரணமாக, கோவை மாவட்டத்தில் தி.மு.க., வுக்கு ஒரு எம்.எல்.ஏ.,வும் இல்லாத நிலையில், மேயராக நியமிக்கப்படும் நபர் பற்றி பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

கோவை மேயராக நியமிக்கப்படுபவர், மாநகர வளர்ச்சிக்கு உதவுவதோடு, கட்சியின் வளர்ச்சிக்கும் உதவ வேண்டுமென்ற எதிர்பார்ப்பு, கட்சி நிர்வாகிகளிடம் இருந்தது. ஆனால் கோவையில் புதிய மேயராக பொறுப்பேற்ற கல்பனா மீது, ஆரம்பத்திலிருந்தே விதவிதமான புகார்கள் குவிந்தன. அவருடைய செயல்பாடுகள், பேச்சுக்கள் குறித்த பல்வேறு வீடியோக்கள், ஆடியோக்கள் வெளியாகின.

Image 1288841


பல இடங்களில், அவருக்கும், மண்டலத்தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்களுக்கும் இடையில் பகிரங்கமாகவே மோதல் நடந்தது. இவையனைத்தும் சமூக ஊடகங்கள் மூலமாக சந்தி சிரித்தன. அத்துடன், அவர் கட்சி சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்பதே இல்லை என்று கட்சியின் கீழ் மட்ட நிர்வாகிகள், தலைமை வரையிலும் புகார்களைக் குவித்தனர். மேயரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீரு பூத்த நெருப்பாக இருந்து வந்தது.

தேர்தலுக்கு முன்பாக, மேயர்கள் மற்றும் நகராட்சித் தலைவர்களை மாற்றினால் அதுவே பெரும் சர்ச்சையாகும்; எதிர்க்கட்சியினர் விமர்சிக்க வழிவகுக்கும் என்று, தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததாகக் கூறப்பட்டது.இந்நிலையில் இன்று வெளியான அறிவிப்பில் கோவை மேயர் கல்பனா ராஜினாமா செய்துள்ளார்.






      Dinamalar
      Follow us