ADDED : ஜூலை 30, 2024 01:48 AM
மதுரை: மதுரை முனிச்சாலையில் தி.மு.க., அரசு 3வது முறையாக உயர்த்திய மின்கட்டணத்தை கண்டித்து அக்கட்சி கூட்டணியில் உள்ள இந்திய கம்யூ., கட்சி ஆர்ப்பாட்டம் நடந்தது.
நகர் செயலாளர் முருகன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் ராஜலட்சுமி, மத்திய கிழக்குப்பகுதி செயலாளர் ரவிச்சந்திரன், தாமஸ், இருளாண்டி, சேது, சுமதி பங்கேற்றனர்.
முருகன் பேசுகையில், ''மக்களை பாதிக்கும் மின்கட்டண உயர்வு அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். இதனை கைவிடவேண்டும். சிறு, குறுந்தொழில்களை பாதிக்கின்ற மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். மத்திய அரசு தமிழகத்திற்கு செய்த அநீதியை மத்திய பட்ஜெட்டில் பார்க்க முடிகிறது. இதனடிப்படையில் ஆக.,1ல் அனைத்து கம்யூ., கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் நடத்தப்படும்'' என்றார்.

