sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தி.மு.க., சுப்புலட்சுமி ஜெகதீசனின் 25 ஏக்கர் பண்ணை வீட்டில் திருட்டு

/

தி.மு.க., சுப்புலட்சுமி ஜெகதீசனின் 25 ஏக்கர் பண்ணை வீட்டில் திருட்டு

தி.மு.க., சுப்புலட்சுமி ஜெகதீசனின் 25 ஏக்கர் பண்ணை வீட்டில் திருட்டு

தி.மு.க., சுப்புலட்சுமி ஜெகதீசனின் 25 ஏக்கர் பண்ணை வீட்டில் திருட்டு

4


ADDED : ஜூன் 25, 2024 01:44 AM

Google News

ADDED : ஜூன் 25, 2024 01:44 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, மாணிக்கம்பாளையம், வி.ஐ.பி., நகரை சேர்ந்தவர் சுப்புலட்சுமி ஜெகதீசன், 72; தி.மு.க., முன்னாள் மத்திய, மாநில அமைச்சர். கட்சியின் துணை பொது செயலராக இருந்தவர். பதவியை ராஜினாமா செய்து விட்டு, கட்சி பணியில் இருந்து ஒதுங்கியுள்ளார். இவருக்கு சொந்தமான, 25 ஏக்கர் பண்ணை வீடு, மொடக்குறிச்சி அருகே புன்செய் காளமங்கலம், சின்னம்மாபுரம் மினி காட்டில் உள்ளது.

இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சுப்புலட்சுமி இங்கு செல்வது வழக்கம். சின்னம்மாபுரத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர், இந்த பண்ணை வீட்டை கவனித்து வருகிறார். பண்ணை வீட்டின் முன் கதவு தாழ்ப்பாள் நேற்று காலை உடைந்து கிடந்தது. மலையம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, வீட்டுக்குள் இரும்பு டேபிள் டிராயரில் வைக்கப்பட்டிருருந்த, 50,000 ரூபாய் திருடு போனது தெரிந்தது. மேலும், அலுவலக அறை, படுக்கை அறை கதவுகளை உடைத்து பணம், நகை உள்ளதா எனவும் திருட்டு கும்பல் தேடியுள்ளது. பண்ணை வீட்டில் 'சிசிடிவி' கேமரா இல்லை. ஆட்கள் நடமாட்டமும் இல்லை என்பது தெரிந்து, திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இந்த துணிகர திருட்டு குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us