sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'அராஜகத்தை தட்டி கேட்டால் அதிகாரிகளை வைத்து மிரட்டுவதா'

/

'அராஜகத்தை தட்டி கேட்டால் அதிகாரிகளை வைத்து மிரட்டுவதா'

'அராஜகத்தை தட்டி கேட்டால் அதிகாரிகளை வைத்து மிரட்டுவதா'

'அராஜகத்தை தட்டி கேட்டால் அதிகாரிகளை வைத்து மிரட்டுவதா'

11


ADDED : ஏப் 26, 2024 02:44 AM

Google News

ADDED : ஏப் 26, 2024 02:44 AM

11


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''அராஜகத்தை தட்டிக் கேட்டால், அதிகாரிகளை வைத்து மிரட்டுவதா; அச்சுறுத்தலுக்கு பா.ஜ., பயப்படாது,'' என, தென் சென்னை பா.ஜ., வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவின் போது, தென்சென்னை தொகுதி, தேனாம்பேட்டை, 13வது ஓட்டுச்சாவடியில் தி.மு.க.,வினர் கள்ள ஓட்டு போட்டதாகவும், அதை தடுக்க முயன்ற தங்கள் கட்சி ஏஜென்ட் கவுதமை தாக்கியதாகவும், பா.ஜ., புகார் எழுப்பியது.

கவுதம் வீட்டிற்கு தமிழிசை, பா.ஜ., மாநில செயலர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் நேற்று சென்றனர்.

பின், தமிழிசை அளித்த பேட்டி:

ஏற்கனவே, 122வது வார்டில், 13வது ஓட்டுச்சாவடியில் தவறு நடந்தது குறித்து தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டது.

கவுதம் வீட்டிற்கு, குடிநீர் வாரிய அதிகாரிகள் வந்து, அச்சுறுத்தும் வகையில் கேள்வி கேட்டு மிரட்டியுள்ளனர்.

அவர் வீட்டில் பம்பு தான் உள்ளது. எந்த கட்டுப்பாட்டும் இல்லாமல், பலருக்கு குடிநீர் இணைப்பு வழங்கியதை விட்டு விட்டனர். பா.ஜ.,வுக்கு அனைவரின் ஆதரவும் உள்ளது.

ஜாதியை வைத்து தி.மு.க., தான் அரசியல் செய்கிறது. கவுதமை மிரட்டிய அதிகாரிகள், அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அராஜகத்தை தட்டி கேட்டால், அதிகாரிகளை வைத்து மிரட்டுவதா; அச்சுறுத்தலுக்கு பா.ஜ., பயப்படாது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us