sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அரசின் மனசாட்சியை தட்டி எழுப்ப முடியல; மருத்துவர்கள் குழு விரக்தி

/

அரசின் மனசாட்சியை தட்டி எழுப்ப முடியல; மருத்துவர்கள் குழு விரக்தி

அரசின் மனசாட்சியை தட்டி எழுப்ப முடியல; மருத்துவர்கள் குழு விரக்தி

அரசின் மனசாட்சியை தட்டி எழுப்ப முடியல; மருத்துவர்கள் குழு விரக்தி

14


ADDED : மார் 10, 2025 12:57 AM

Google News

ADDED : மார் 10, 2025 12:57 AM

14


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'பொதுவாக கல்லையும், கரைய வைக்க முடியும் என்பர். ஆனால், அரசின் மனசாட்சியை தட்டி எழுப்ப முடியவில்லை' என, அரசு மருத்துவர்களுக்கான சட்ட போராட்டக்குழு தலைவர் பெருமாள்பிள்ளை தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:


முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற போது, கொரோனா தொற்றின் உச்சத்தால் அசாதாரண சூழல் நிலவியது. அன்று முதல் இன்று வரைக்கும், அரசுக்கு உறுதுணையாக, 19,000 அரசு மருத்துவர்கள் உள்ளனர்.

ஆனால், அவர்கள் மீது முதல்வரின் பார்வை விழாதது வருத்தம் அளிக்கிறது. எதிர்பாராத விபத்துகள், இயற்கை பேரிடர் மட்டுமின்றி, கள்ளச்சாராய இறப்புகள் வரைக்கும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உடனடியாக முதல்வர் நிவாரணம் வழங்குகிறார்.

ஆனால், கொரோனா பேரிடரில் பணியாற்றி இறந்த அரசு டாக்டர்கள் குடும்பத்திற்கு, தி.மு.க., அரசு 10 காசு கூட நிவாரணம் தராதது வேதனையானது.

மகளிர் நலனில் முக்கியத்துவம் தரும் அரசு என்று சொல்கின்றனர்.

ஆனால், மறைந்த அரசு டாக்டர் விவேகானந்தனின் மனைவி, அரசு வேலை கேட்டு, கண்ணீருடன் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்தும், அவரது கவனத்தை ஈர்க்க முடியவில்லை. இதனால், வேறு வழியின்றி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அரசு வேலை தர வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், இதுவரை அரசு மனம் இரங்கவில்லை.

பொதுவாக கல்லையும், கரைய வைக்க முடியும் என்பர். ஆனால், அரசின் மனசாட்சியை தட்டி எழுப்ப முடியவில்லை.

கடந்த டிசம்பரில் நடந்த சட்டசபை கூட்டத்தில், 'டாக்டர் விவேகானந்தன் மனைவிக்கு, அரசு வேலை தர வேண்டும்' என, பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி வலியுறுத்தினார்.

அதற்கு அமைச்சர் சுப்பிரமணியன், 'விவேகானந்தனுக்கு இரண்டு மனைவியர். குடும்பத்தில் நிறைய பிரச்னைகள்.

'அதனால், அவரது மனைவிக்கு அரசு வேலை தர முடியவில்லை' என்ற, முற்றிலும் தவறான தகவலை தெரிவித்தார்.

தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக, டாக்டர் விவேகானந்தனின் வாரிசு என்பதை, அவரது மனைவி திவ்யா உறுதி செய்யுள்ளார்.

எனவே, அவரது மனைவிக்கு அரசு வேலைக்கான உத்தரவை முதல்வர் ஸ்டாலின் வழங்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us