கொடைக்கானலில் துவங்கியது நாய் கண்காட்சி: இந்தியா முழுவதும் 424 நாய்கள் பங்கேற்பு
கொடைக்கானலில் துவங்கியது நாய் கண்காட்சி: இந்தியா முழுவதும் 424 நாய்கள் பங்கேற்பு
ADDED : ஆக 03, 2024 08:17 PM

கொடைக்கானல்:கொடைக்கானலில் துவங்கிய நாய் கண்காட்சியில் 424 நாய்கள் பங்கேற்றன.
தி கொடைக்கானல் கென்னல் அசோசியேஷன், தி மெட்ராஸ் கெனைன் கிளப், தி சேலம் அக்மி கென்னல் கிளப் சார்பில் கொடைக்கானலில் நாய் கண்காட்சி நேற்று துவங்கியது. இரு தினங்கள் நடக்கும் இக்கண்காட்சியில் இந்தியா முழுவதுமிருந்து 424 நாய்கள் பங்கேற்றன.
பாக்சர், டோபர்மேன், கிரேடன், செர்மன் செப்பர்டு, ஆஸ்திரேலியன் புல்டாக், பக், டாக்சன்ட், பிகில், ஆப்கான் கவுன்ட், டாய் பொமோரியன், கோல்டன் ரெட்ரீவர், சிஜூ, சிப்பிபாறை, ராஜபாளையம், ஹஸ்கி உள்ளிட்ட 60 வகையான நாய்கள் இடம் பெற்றன. பல்வேறு பிரிவுகளில் நாய்களுக்கான தேர்வுகள் நடந்தன. வெளிநாடு, உள் நாட்டை சேர்ந்த வல்லுனர்கள் நடுவர்களாக இருந்தனர். சாம்பியன் பட்டம் பெறும் செல்லத்தை பார்வையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.