ADDED : மார் 07, 2025 12:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:கடத்தி வரப்பட்டுள்ள, 18.2 கோடி ரூபாய் மதிப்பிலான இ- - சிகரெட்டுகள், கைக்கடிகாரங்களை, சென்னை துறைமுகத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வெளிநாடுகளில் இருந்து வந்திறங்கிய கன்டெய்னர்களை, சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அவற்றில், மூன்று சரக்கு பெட்டகங்களில், இ - சிகரெட், வாட்ச், காலணிகள் இருந்தன. அவை அனைத்தும் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டதாக தெரிய வந்தது. அவற்றின் சந்தை மதிப்பு, 18.2 கோடி ரூபாய்.
இது தொடர்பாக ஐந்து பேரை, சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரிக்கின்றனர்.