ADDED : மே 28, 2024 06:18 AM

தனியாரிடமிருந்து தொழில் நிறுவனங்கள் வாங்கும் மின்சாரத்திற்கு கட்டணம், வரியாக யூனிட்டுக்கு 1 ரூபாய் 94 காசு செலுத்தப்படுகிறது. இப்போது கூடுதலாக, 34 காசுகள் வரி செலுத்த வேண்டும் என, மின் வாரியம் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் அளவுக்கு அதிகமான மின் கட்டண உயர்வால், ஏராளமான குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. யூனிட்டுக்கு, 34 காசு கூடுதல் வரி விதிக்கப்பட்டால், மீதமுள்ள பெருந்தொழில் நிறுவனங்களும் மூடப்படும் நிலை ஏற்படும். இதைத்தான் தமிழக அரசு விரும்புகிறதா என்று தெரியவில்லை.
மின்சார கொள்முதல் செலவு அதிகரிப்பு, மின் வாரியத்தில் நடக்கும் ஊழல்களால் தான், மின் வாரியம் இழப்பை சந்திக்கிறது. இதை சரி செய்யாமல், மின் கட்டணத்தை உயர்த்துவது, தனியாரிடம் வாங்கும் மின்சாரத்திற்கு கூடுதல் வரி விதிப்பது என, தொழில் நிறுவனங்கள் மீது பொருளாதார தாக்குதல்களை, தமிழக அரசு தொடுப்பது கண்டிக்கத்தக்கது.
-- அன்புமணி,
பா.ம.க., தலைவர்