ADDED : ஜூன் 14, 2024 02:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழகத்தில் அடுத்த வாரம் அகழாய்வுப் பணிகள் துவங்க உள்ளன.
தமிழகத்தில், ஐந்து கோடி ரூபாய் செலவில் எட்டு இடங்களில் அகழாய்வு செய்ய, தமிழக தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது.
இதற்கான அனுமதியை, கடந்த வாரம் மத்திய தொல்லியல் ஆலோசனை வாரியம் வழங்கியது.
இதையடுத்து, வரும் 18ம் தேதி, முதல்வர் ஸ்டாலின், காணொளி வாயிலாக அகழாய்வை துவக்கி வைக்க உள்ளார்.
சிவகங்கை மாவட்டம் கீழடி, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை, திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டி, தென்காசி மாவட்டம் திருமலாபுரம், திருப்பூர் மாவட்டம் கொங்கல் நகரம், கடலுார் மாவட்டம் மருங்கூர், கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானுார் ஆகிய இடங்களில் அகழாய்வு பணிகள் துவங்க உள்ளன.

