sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இங்கேதான் இதயமும் இருக்கும்; சண்டையும் இருக்கும்: வெளிநாடு பயணத்துக்கு முன் அண்ணாமலை வெளிப்படை!

/

இங்கேதான் இதயமும் இருக்கும்; சண்டையும் இருக்கும்: வெளிநாடு பயணத்துக்கு முன் அண்ணாமலை வெளிப்படை!

இங்கேதான் இதயமும் இருக்கும்; சண்டையும் இருக்கும்: வெளிநாடு பயணத்துக்கு முன் அண்ணாமலை வெளிப்படை!

இங்கேதான் இதயமும் இருக்கும்; சண்டையும் இருக்கும்: வெளிநாடு பயணத்துக்கு முன் அண்ணாமலை வெளிப்படை!

30


UPDATED : ஆக 27, 2024 02:06 PM

ADDED : ஆக 27, 2024 01:54 PM

Google News

UPDATED : ஆக 27, 2024 02:06 PM ADDED : ஆக 27, 2024 01:54 PM

30


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'நான் வெளிநாடு சென்றாலும், ஆளுங்கட்சியின் தவறை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிடுவேன். சண்டை தொடரும்,' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு மேற்படிப்புகாக, தமிழக பா.ஜ., தலைவர் செல்ல உள்ளார். இந்நிலையில், சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக இன்று இரவு செல்கிறேன். நான் வெளிநாட்டிற்கு சென்றாலும், ஆளுங்கட்சியுடன் சண்டை இருக்கும். நான் வெளிநாட்டிற்கு சென்றாலும், என் இதயம் இங்கே தான் இருக்கும்.

அறிக்கை வரதான் செய்யும்!

வெளிநாடு சென்றாலும் அரசியல் செய்வேன். நான் வெளிநாடு சென்றாலும், ஆளுங்கட்சியின் தவறை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிடுவேன். சண்டை தொடரும். பா.ஜ.,வில் உறுப்பினர் சேர்க்கை வரும், செப்டம்பர் 1ம் தேதி முதல் துவங்கும். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கிராமங்களை நோக்கி பயணம் செல்ல இருக்கிறோம்.

கிராமத்தை நோக்கி பயணம்

தேசிய அளவில் பிரதமர் மோடியும், தமிழகத்தில் எச்.ராஜாவும் முதல் உறுப்பினராக பா.ஜ.,வில் இணைவர். உறுப்பினர் சேர்க்கைக்காக இம்முறை கிராமத்தை நோக்கி பா.ஜ., பயணம் மேற்கொள்கிறது. பா.ஜ., தரும் அலைபேசி எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்து, உறுப்பினராக இணையலாம். முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே மேற்கொண்ட வெளிநாடு பயணங்கள் தோல்வியில் தான் முடிந்தன.

தனித்து போட்டி

கட்சி வளர வேண்டும் என்றால் தனித்துத் தான் போட்டியிட வேண்டும். அரசியலில் மக்களின் பார்வை மாறிவிட்டது. 40 சதவீத வாக்காளர்கள் 39 வயதுக்குக் கீழ் இருக்கின்றனர்.இந்தியா மாறிவிட்டது. அ.தி.மு.க.,வில் 70 வயதுக்கு மேல் உள்ளவர்கள் டை அடித்துக் கொண்டால், அவர்கள் இளைஞர்கள் ஆகிவிடுவார்களா? மக்களிடம் பேசுவதிலும், செயலிலும் தான் இருக்கிறது இளமை. தலையில் டை அடிப்பதில் இல்லை. இ.பி.எஸ்., மீதான விமர்சனத்தில் இருந்து பின்வாங்க மாட்டேன். நான் வைத்த விமர்சனம் 100 சதவீதம் சரியானது.இவ்வாறு அண்ணாமலை கூறினார்.






      Dinamalar
      Follow us