மீனவர்களுக்கு 'லைப் ஜாக்கெட்' விண்ணப்பிக்க அழைப்பு
மீனவர்களுக்கு 'லைப் ஜாக்கெட்' விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : மார் 07, 2025 12:31 AM
சென்னை:'தமிழகத்தில் உள்ள, 14 கடலோர மாவட்டங்களில், நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு, 75 சதவீதம் மானியத்தில், 'லைப் ஜாக்கெட்' வழங்கப்படுகிறது' என, மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:
கடலில் மீன் பிடிக்கும் போது, படகு கவிழ்ந்து அல்லது தவறி விழுந்து, மீனவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன. அதை தவிர்க்க, படகில் செல்லும் அனைவரும் கட்டாயம், 'லைப் ஜாக்கெட்' அணிய வேண்டும் என, அரசு அறிவுறுத்தி உள்ளது. இதற்காக நடப்பாண்டில், 40,000 லைப் ஜாக்கெட்கள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதை பெற, பதிவு செய்யப்பட்ட நாட்டுப் படகு வைத்திருப்போர், அந்தந்த மாவட்ட மீன்வள அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு படகிற்கு நான்கு லைப் ஜாக்கெட் வழங்கப்படும். ஒன்றின் விலை, 2,472 ரூபாய். மானியத் தொகை 75 சதவீதம் போக, மீதம் 618 ரூபாயை விண்ணப்பதாரர் செலுத்த வேண்டும். இத்திட்டத்தில்,10,000 நாட்டுப்படகு உரிமையாளர்கள் பயன்பெறுவர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.